22
Jun

நீடூர்-நெய்வாசல் ரைஸ்மில்தெரு ஹஜ்ஜி முஹம்மது – அஷ்ரப் அலி ஆகியோரின் தகப்பனார் (புங்கனூர்) முஹம்மது பாரூக் இன்று(22-06-2010) மாலை காலமானார்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

தகவல்: M.S.ஜெகபர் அலி, நீடூர்-நெய்வாசல்

20
Jun

19
Jun

மிஸ்பாஹி உலமா பேரவையின்
மூன்றாவது மாநில செயற்குழு தீர்மானங்கள்

இறையருளால் 16.03.2010 செவ்வாய்க்கிழமை காலை நாகை மாவட்டம் நீடூர் நெய்வாசல் ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா அரபிக்கல்லூரியின் நிக்காஹ் மஹால் அரங்கத்தில் வைத்து மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது. (Read More…)

18
Jun

15
Jun

இந்திய தொலைத் தொடர்பு சந்தையில் ஏற்பட்டுள்ள பெரும் போட்டி காரணமாக இனி 1 எம்பிபிஎஸ் திறன் கொண்ட வரையறையில்லா பிராட்பேண்ட் இணைப்புக்கு ரூ 299 மட்டுமே கட்டணம் என்ற நிலை தோன்றியுள்ளது.

இது பிராட்பேண்ட் பயனாளர்களை சந்தோஷப்படுத்தும் செய்தியாகும். சமீபத்தில் 3 ஜி பிராட்பேண்ட் வயர்லெஸ் சேவைக்கான ஏலம் முடிந்தது. இதில் இன்போடெல் நிறுவனம் 22 சர்க்கிள்களுக்கான உரிமத்தை வென்றுள்ளது. இந்த நிறுவனத்தைத்தான் முகேஷ் அம்பானி வாங்கியுள்ளார். அண்ணனுக்கு ஆதரவாக, ஏலத்திலிருந்தே அனில் அம்பானியின் ரிலையன்ஸ் கம்யூனிகேஷன்ஸ் விலகிக் கொண்டது. எனவே, ஏராளமான சலுகைகளுடன் முகேஷின் ரிலையன்ஸ் நிறுவனம் பிராட்பேண்ட் சேவைகளை அளிக்கப் போகிறது.

அதே நேரம், இந்தப் போட்டியைச் சமாளிக்க, நிறைய சலுகைத் திட்டங்களை போட்டி நிறுவனங்களும் அறிவித்தாக வேண்டிய கட்டாயத்தில் உள்ளன. ஏர்டெல், ஏர்செல், டாடா போன்ற நிறுவனங்களும் 3 ஜி பிராட்பேண்ட் சேவை அளிக்க உள்ளன. இன்னொரு பக்கம் அரசுத் துறையின் பிஎஸ்என்எல், எம்டிஎன்எல் நிறுவனங்களுக்கும் 3 ஜி பிராட்பேண்ட் சேவை உரிமம் வழங்கப்பட்டுள்ளது. அனைத்து சர்க்கிள்களிலும் இந்த சேவை கிடைக்கும். தனியார் மற்றும் அரசுத் துறை நிறுவனங்கள் போட்டி போட்டுக் கொண்டு பிராட்பேண்ட் சேவை அளிப்பதால், 1 எம்பிபிஎஸ் வரை வரையறையில்லா பிராட்பேண்ட் இணைப்புக்கு ரூ 299 மட்டும் செலுத்தினால் போதும் என்ற நிலை உருவாகியுள்ளது.

ஏற்கெனவே, பிஎஸ்என்எல் நிறுவனம் 2 எம்பிபிஎஸ் வரை வேகம் கொண்ட பிராட்பேண்ட் இணைப்புக்கு ரூ 1350 வசூலிக்கிறது. (பிஎஸ்என்எல்லில் மட்டுமே இந்த வசதி. மற்ற நிறுவனங்கள் 2 எம்பிபிஎஸ் வரை அன்லிமிடட் என்று கூறிவிட்டு, குறிப்பிட்ட அளவு டவுன்லோட் முடிந்ததும், 256 KBPS ஆக சுருக்கி விடுகின்றன. இது வாடிக்கையாளருக்குத் தெரிவதில்லை!). இனி இந்த கட்டணமும் மாறும். 4 எம்பிபிஎஸ் வரையிலான அன்லிமிடட் பிராட் பேண்ட் இணைப்பு ரூ 800-க்கே கிடைக்கும் நிலை உருவாகியுள்ளது. இதன்மூலம் விரைவான டவுன்லோட் மற்றும் தொலைக்காட்சி இணைப்பைப் பெற முடியும்.

நன்றி: தினமலர் வர்த்தக மலர், 15-06-2010

11
Jun

நீடூர்-நெய்வாசல் ஜின்னாத்தெரு வாப்பு வீடு ஹாஜி முஹம்மது இக்பால் இன்று (11-06-2010) நண்பகல் 1-மணிக்கு காலமானார்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

தகவல்: M.S.ஜெகபர் அலி, நீடூர்-நெய்வாசல்