25
Mar

நீடூர்-நெய்வாசல் புதுமனைத்தெரு வாப்பு வீடு முஹம்மது இஸ்மாயீல் இன்று(25-03-2010) காலை காலமானார்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

தகவல்: M.S.ஜெகபர் அலி(STD), நீடூர்-நெய்வாசல்

22
Mar

நீடூர்-நெய்வாசல் பள்ளிவாசல்தெரு ஜென்டில் வீடு அஷ்ரப் அலி-அஹ்மது தம்பி ஆகியோரின் தங்கை உம்முல் பரக்கத் இன்று(22-03-2010) மாலை தனது அஜீஸ் நகர் குடியிருப்பில் காலமானார்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

தகவல்: O.M.சாதிக், துபை.

19
Mar

விழுப்புரம் – மயிலாடுதுறை அகல ரயில் பாதையில் தலைமை பாதுகாப்பு கமிஷனர் ஆய்வு முடிந்துவிட்ட நிலையில், நேற்று முதல் முறையாக 118 கி. மீ., வேகத்தில் அதிவேக ரயில் சோதனை ஓட்டம் நடத்தப்பட்டது.  பத்து பெட்டிகள் இணைக்கப்பட்ட அதிவேக சோதனை ரயில் மயிலாடுதுறையில் நேற்று மாலை 3.08 மணிக்கு புறப்பட்டு, 118 கி.மீ., வேகத்தில் விழுப்புரம் வரை சென்றது. இந்த அதிவேக சோதனை ரயில் மயிலாடுதுறையில் இருந்து 37 கி.மீ., தூரமான சிதம்பரத்தை 3.32க்கும், கடலூரை 4.05 மணிக்கும், பண்ருட்டியை 4.23க்கும் கடந்தது. அசுர வேகத்தில் சென்ற ரயில், மாலை 4.35 மணிக்கு விழுப்புரம் ஜங்ஷனை சென்றடைந்தது.  (Read More…)

10
Mar

பிரான்ஸ் வில்லியர்ஸ் சுர்மானில் கடந்த 07-03-2010 ஞாயிறன்று நடைபெற்ற சீரத்துன் நபி விழாவில் மெளலவி முஸ்தபா ஜமாலி அவர்களின் சிறப்புரை

9
Mar

பிரான்ஸ் வில்லியர்ஸ் சுர்மானில் கடந்த 07-03-2010 ஞாயிறன்று நடைபெற்ற திருக்குர்ஆன் போட்டியில் பங்கேற்ற சிறுவர், சிறுமியருக்கு பரிசளிப்பு நடைபெற்றது.

7
Mar

நீடூர்-நெய்வாசல் J.M.H. அரபிக் கல்லூரியில் நடைபெற்ற சீரத் தொடர் சொற்பொழிவில் மெளலவி சதீதுத்தீன் பாகவி அவர்களின் சிறப்புரை

5
Mar

4
Mar

இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 16-03-2010 செவ்வாய் கிழமை காலை 9-மணியளவில் நீடூர்-நெய்வாசல்  J.M.H.நிகாஹ் மஹாலில் மிஸ்பாஹிகள் பேரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. உலகெங்கும் வாழும் மிஸ்பாஹிகள் இயன்றவரை தவறாமல் பங்கேற்க வேண்டுகிறார்கள். பங்கேற்க இயலாதவர்களும் தங்களது முகவரிகளை பதிவு செய்ய வேண்டுகிறார்கள்.

தொடர்பு கொள்ள வேண்டிய முகவர்:

அல்ஹாபிஸ்.T.M.அப்துல் குத்தூஸ் மிஸ்பாஹி, மீடியா தொடர்பாளர் – மிஸ்பாஹிகள் பேரவை

கைபேசி:0091 9443742840 

2
Mar

நீடூர்-நெய்வாசல்  ஹாஜித்தெரு முஹம்மது ரபீக் அவர்களின் தந்தை முஹம்மது நூர்தீன் இன்று(02-03-2010) காலை மலேசியாவில் காலமானார்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

அன்னாரின் ஜனாஸா இன்று மாலை மலேசியாவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.