29
Sep

Episode-6

To Download Right Click & Save Target as

28
Sep

நீடூர் & நெய்வாசல், இரண்டு ஜமாஅத்தார்களும் இணைந்து இன்ஷா அல்லாஹ் நீடூர்-நெய்வாசல் புதிய ஜாமிஆ மஸ்ஜிதில் நோன்புப்பெருநாள் தொழுகை நடத்த முடிவு செய்யப் பட்டுள்ளது.

அல்லாஹ் நமது அமல்களை ஏற்று ஒற்றுமையை மேலோங்க செய்வானாக!

25
Sep

அகில உலக ஹாங்காங் மாணிக்க கண்காட்சியில் இஃப்தார் நிகழ்ச்சி

 2008 செப்டம்பர் 15முதல் 19தேதி வரை ஹாங்காங் கன்வென்ஷன் சென்டரில் நடைபெற்ற ஜுவல்லரி கண்காட்சி புனித ரமழானில் நடைபெற்றது. உலகில் பல நாடுகளிலிருந்தும் வியாபார பெருமக்கள், குறிப்பாக இஸ்லாமிய வணிக வள்ளல் பெருமக்கள் திரளாக கலந்து கொண்டார்கள். (Read More…)

22
Sep

Episode-5

To Download Right Click & Save Target As

20
Sep

நமது சுற்றுவட்டார ஊர்களில், ஏன் குறிப்பாக நீடூர்-நெய்வாசலில் நடந்தேறியுள்ள சில சம்பவங்கள் நம்மை யோசிக்க வைக்கின்றன. இண்டேன் கேஸ் டெலிவரி செய்பவர்கள் சிலர் நம்மவர்களின் வீடுகளுக்கு வந்து “எத்தனை சிலிண்டர்கள் உள்ளன?” “ஒன்றுக்கு மேல் இருந்தால் திருப்பித் தர வேண்டும்” என்று கேட்டு எடுத்தும் சென்றுள்ளார்கள்.

தாமதமாக இண்டேன் கேஸ் கிளையை விசாரித்தபோது டெலிவரிமேன் என்று சொல்லி வந்தவர்கள் போலியானவர்கள் என்பது தெரிய வந்துள்ளது. பொதுமக்கள், குறிப்பாக பெண்கள் மட்டும் வீட்டில் உள்ளவர்கள் மிகவும் ஜாக்கிரதையாக இருக்க வேண்டும்.

19
Sep

முஸ்லிம்களின் உயிரினும் மேலான முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கேலிச்சித்திரத்தை வெளியிட்டு உலக இஸ்லாமியர்களின் உணர்வோடு விளையாடிய தின மலர் நாளிதழ் ஆசிரியர்-வெளியீட்டாளருக்கு முன் பிணை அளிக்க நீதி மன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. சென்னை நீதிமன்றம் கைது உத்தரவு பிறப்பித்துள்ளது.

18
Sep

யிலாடுதுறை மஸ்ஜிதே நூர் பள்ளிவாசலில் 15-09-2008 அன்று நடைபெற்ற இப்தார் நிகழ்ச்சி

15
Sep

Episode-4

To download Right Click & Save Target As

14
Sep

“உனக்குள் ஒரு சுரங்கம்” இது விழி விரிய வியப்பில் ஆழ்த்தும் அரங்கம்.
மாணவனை சிந்திக்கத் தூண்டினால் அவனுள் இருக்கும் திறமை என்னும் சுரங்கம்.
அதை வெளிக்கொணருவது இந்த உனக்குள் ஒரு சுரங்கம்.

ஏன்? என்ற கேள்வியே அறிவு தேடலின் ஆதாரம். ஆதாரமாக அதைக் கொண்டு மாணவனின் சிந்தையை தூண்டும் உத்தி. உத்தி புரிந்துக் கொண்டால் சிறக்கும் மாணாக்கரின் புத்தி.

இதைப் பார்க்கும் போது, மாணவ பருவத்தை கடந்து விட்டோமே என்று எனக்குள் ஒரு ஏக்கம். ஆனால் இது என்னுள் ஏற்படுத்தி வருவதோ பெரிய தாக்கம்.

பாராட்டையும் வாழ்த்தையும் ஒரு சேர தெரிவித்துக்கொள்கிறேன்.

வவ்வாலடி பிரோஸ்கான், பிரான்ஸ்

14
Sep

கர்ப்பப்பை புற்றுநோயைத் தடுப்பது எப்படி?  

கர்ப்பப்பையின் வாய்ப் பகுதியில் ஏற்படும் புற்றுநோயால் (Cervical Cancer) இந்தியாவில் சுமார் ஒரு லட்சத்து 30 ஆயிரம் பேர் உயிரிழப்பதாகத் தெரிய வந்துள்ளது.உலகளவில் வளரும் நாடுகளில் இந்த புற்றுநோய் ஏற்படும் சுமார் 4 லட்சத்து 73 ஆயிரம் பேரில் 2 லட்சத்து 53 ஆயிரத்து 500 பேர் உயிரிழப்பதாகவும் தெரிய வந்துள்ளது.

(Read More…)

11
Sep

நீடூர்-நெய்வாசல், பாவா நகர் ரைஹானா நிஸ்வான் மத்ரஸா கட்டுமானப்பணி வசூலுக்காக A.M.யூசுப் இன்ஷா அல்லாஹ் பேங்காக் வருகிறார். இன்ஷா அல்லாஹ் 10 நாட்கள் அல்ஹாஜ் T.S.R.ஹுமாயூன் அவர்களுடன் தங்குகிறார். அனைவரும் தாராளமாக நிதியுதவி அளித்து ஒத்துழைக்குமாறு கேட்டுக்கொள்கிறோம்.

10
Sep

முஹம்மது நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் கார்ட்டூனை வெளியிட்டு தனது இஸ்லாமிய விரோதக் கொள்கையை நிரூபித்த தினமலர், இஸ்லாமியர்களின் கடும் கோபத்தையும், கண்டனத்தையும் பெற்றதை அறிவோம். அதன் தொடர்ச்சியாக அமீரகத்தில் தினமலர் இணையதளத்தைத் தடை செய்யக்கோரி ஆயிரக்கணக்கில் மின்னஞ்சல் விண்ணப்பங்கள் அரசாங்கத்திற்கு வந்ததன் விளைவாக இன்று முதல் தினமலர் இணையதளத்திற்கு ஐக்கிய அரபு அமீரக அரசாங்கம் தடை விதித்துள்ளது!

10
Sep

நீடூர்-நெய்வவசல் பாவா நகரில் 27-07-2008 அன்று நடபெற்ற ரைஹானா பெண்கள் மத்ரஸா பட்டமளிப்பு விழாவில் மெளலவி அல்-ஹாபிள் அப்துல் ஸலாம் ரஹ்மானி அவர்கள் ஆற்றிய உரை 

8
Sep
Episode-3 To Download Right Click & Save Target as

அல்ஹம்துலில்லாஹ்… சகோதரர் மன்சூர் அவர்களின் முயற்சியின் பரிமாணத்தைப் புரிந்துகொள்ள அடையாளமாக அமைந்த ஓர் இழை.
நம்முள் ஆர்வத்தைத்தூண்டி சுரங்கம் விரிவடைகின்றது, அண்டம் தொடர்ந்து விரிவடைந்து கொண்டிருப்பதைப் போல.
கேள்விகளை முன்வைத்து, பதில் தருவது போல மூன்றாவது பகுதியிலமைத்திருப்பது நல்ல உத்தி. இம்முறை வீடியோ பதிவு முன்பை விட சிறப்பாக அமைந்திருக்கிறது.
- டாக்டர் ஹிமானா சையத்
5
Sep

To Download Right Click & Save Target as

3
Sep

நீடூர்-நெய்வாசல் ஜின்னாத்தெரு மர்ஹும் பிஸ்க் ஆலிம்சா மனைவி மரியம் பீவி 03-09-2009 அன்று பாண்டிச்சேரியில் காலமானார்.

அன்னாரின் ஜனாஸா 03-09-2009 அன்று மாலை நீடூர்-நெய்வாசலில் நல்லடக்கம் செய்யப்பட்டது.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.