நீடூர்-நெய்வாசலிலிருந்து 2007-ல் ஹஜ் கடமையை நிறைவேற்றியவர்கள் விவரம்:
(Read More…)
நீடூரில் “உம்முல் குரா” நிஸ்வான் மத்ரஸா திறப்பு விழா 30-12-2007 அன்று சிறப்பாக நடைபெற்றது.
ஜமாஅத்தார்களும், சமுதாய ஆர்வலர்களும் கலந்துக் கொண்டு சிறப்பித்தார்கள்.
நீடூர் வடக்குத்தெரு ஹிதாயத்துல்லாஹ் அவர்களின் பெரியம்மா 30-12-2007 அன்று காலமானார்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
லால்பேட்டையார் என்று அழைக்கப்படும் அப்துல் ஹகீம் இன்று காலை காலமானார்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

No Polls available right now.
முனைவர் ரபீயுத்தீன் அவர்களின் மாமா திருமங்கலம் அப்துல் ரஷீது காலமானார்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
நீடூர்ஆன்லைன்.காம் தளத்தை தினந்தோறும் பார்த்து வருகிறேன். குறுகிய காலத்தில் மிகவும் பிரபலமாகி வருகிறது.
அண்ணன் அ.மு.சயீத் அவர்களை அதிகம் நினைவு கூறி வருவது தளத்தின் நிர்வாகிகள் மர்ஹூம் அவர்கள் மீது வைத்திருக்கும் உண்மையான அன்பையும், நன்மதிப்பையும் வெளிப்படுத்துவதாக உள்ளது.
“அற்புதம் என்றாலும்…” பாடலை பலமுறைக் கேட்டு அதன் பொருட்சுவையில் அகமகிழ்ந்திருக்கிறேன். ஆனால் அர்த்தமுள்ள அந்த பாடல் அண்ணன் அ.மு.சயீத் அவர்களின் ஆக்கம்தான் என்பதை நீடூர்ஆன்லைன்.காம் மூலமே அறிந்தேன்.
பாடலுக்கு தனது கம்பீரமான குரல் மூலம் மெருகேற்றிய இளவல் தேரிழந்தூர் தாஜுதீன் அவர்களுக்கும், அதை உலகெங்கும் வாழும் சமுதாய மக்கள் அனைவருக்கும் ஒலி,ஒளி பரப்பிய நீடூர்ஆன்லைன்.காம் இணையதளக்குழுவினருக்கும் மிக்க நன்றி.
-அ.முஹம்மது அலி ஜின்னா
நீடூர்-நெய்வாசல்
அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ் ……
சிந்தனைச் சித்தர் நீடூர் அல்ஹாஜ் சயீத் அண்ணன் அவர்கள் காலமான செய்தி 12 – 12 – 2007 அன்று அஸர் தொழுகைக்காக ஒழுச்செய்து கொண்டிருந்த போது கிடைத்தது.கொட்டிய பெருமழையும் உடன் புறப்பட முடியாத உடல்நிலையும் 15-ம் தேதி வரை பயணத்தை ஒத்தி போட வைத்தன.
அவர்களது இல்லத்துக்குச் சென்று குடும்பத்தினரைச் சந்தித்ததும் அவர்களது கபுருக்குச் சென்று அவர்களது ‘மஃபிரத்’துக்காகப் பிரார்த்தித்ததும் நெஞ்சில் என்றும் நிலைக்கப் போகும் பதிவுகள். (Read More…)

கனடாவில் இந்தியர்களின் ஏற்பாட்டில் புதிய பள்ளிவாசல்
ஜாமிஆ அபூபக்கர் சித்தீக் மஸ்ஜித்
விரைவில் திறக்கப்பட உள்ளது.
புகைப்படத்துடன் தகவல்: தஞ்சை முஹம்மது சுல்தான்,கனடா
இப்பகுதியில் உலகின் பல பாகங்களிலும் வாழும் உங்கள் உறவினர்களுக்கும், நண்பர்களுக்கும்

(Comments-ல்) பெருநாள் வாழ்த்துக்களை பதிவு செய்து மகிழுங்கள்!
Real Player Required 
துபாய் ஈமான் அமைப்பு நடத்திய வாழ்த்தரங்கம்
துபாய் ஈமான் அமைப்பு மத்திய கிழக்கு ஆசிய வளர்ச்சிக்கு உதவிய சிறந்த ஆசியருக்கான விருது பெற்ற ETA அஸ்கான் ஸ்டார் குழுமத்தின் நிர்வாக இயக்குநர் செய்யது எம் ஸலாஹுத்தீன் அவர்களுக்கு வாழ்த்தரங்கம் 15.12.2007 சனிக்கிழமை மேரியாட் ஹோட்டலில் நடைபெற்றது.
துவக்கமாக ஈமான் அமைப்பின் விழாக்குழு செயலாளர் காயல் யஹ்யா முஹ்யித்தின் இறை வசனங்களை ஓதினார். பொதுச்செயலாளர் குத்தாலம் ஏ.லியாகத் அலி வரவேற்புரை நிகழ்த்தினார். (Read More…)

நாம் யார்?
அசுத்தத்திலிருந்து பிறந்தவர்கள். ஆனால் அசுத்தமான செயல்களை அடியோடு வெறுப்பவர்கள். பிறப்பால்,மொழியால், இனத்தால், நிறத்தால் ஏற்றத்தாழ்வு இல்லை என்பதை அடிப்படையாய் ஏற்றுக் கொண்டவர்கள். ஆனால் சில வேளைகளில் நம்மை நாமே உயர்வாக எண்ணிக் கொள்கிறோம். நம்மை நாமே உயர்வாக எண்ணவில்லையென்றால் தாழ்வு மனப்பான்மையல்லவா வந்துவிடும் என்கிறீர்களா? நமது திறமையை வளர்ப்பதற்கு, சாதனைப் படைப்பதற்கு உயர்வாக நினைப்பது தவறில்லை. ஆனால் அந்த நினைப்பு நம்மை கர்வம் கெண்டவர்களாக ஆக்கிவிடக் கூடாது. அவ்வாறு கர்வ நிலை ஏற்படுமேயானால் அதன் விளைவு விபரீதத்தில் போய் முடியும். நேரடியாகவும், மறைமுகமாகவும் பல்வேறு வகையில் பலருக்கும் பெரும் பாதிப்பை ஏற்படுத்தும். (Read More…)
சிந்தனைச் சித்தர் அவர்களுடைய இழப்பு தமிழ் இஸ்லாமிய சமுதாயத்திற்கு ஒரு பேரிழப்பாகும்.
என்னுடய சிறுவயது முதலே (என் தந்தையார் அவர்களுடன் இருந்த நட்பின் காரணமாக) மர்ஹூம் அவர்களுடன் பல முறை நெருங்கிப் பழகும் வாய்ப்பினைப் பெற்றவன் நான்.
சில மாதங்களுக்கு (மே 2007) முன்னர் சென்னையில் நடந்த இஸ்லாமிய தமிழ் மாநாட்டின் போது, நீண்ட இடைவெளிக்குப பின்னர் நாங்கள் புதுக் கல்லூரிப் பள்ளிவாசலில் சந்தித்துப் பேச வாய்ப்பு கிடத்தது. அதுதான் இவ்வுலகில் எங்களின கடைசி சந்திப்பு. (Read More…)









