To Download Right Click & Save Target as
நீடூர்-நெய்வாசல் புதுக்குளத்தெரு ஹாஜியார் வீட்டு சபீருல்லாஹ் அவர்களின் தம்பி அமானுல்லாஹ் அவர்கள் 30-07-2007 திங்கள் இரவு 7-30 மணிக்கு வடகரையில் காலமாகி விட்டார்கள். இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன். அன்னாரின் ஜனாஸா 31-07-2007 செவ்வாய் அன்று நல்லடக்கம் செய்யப்படும்.

அல்லாஹ்வின் மாபெரும் கிருபையால் சமுதாய விழிப்புணர்வு பெருவிழா 15-07-2007 ஞாயிறு காலை 10-மணிக்கு சிந்தனை சித்தர் அல்ஹாஜ் A.M.சயீது B.A.B.L., அவர்களின் தலைமையில் துவங்கியது. சகோதரர் ஷமீமுல் இஸ்லாம் அவர்கள் கிராஅத்துடன் துவங்கி அல்ஹாஜ் S.அக்பர் அலி வரவேற்புரை நிகழ்த்த சகோதரர் J.P.ஜவ்ஹர் அலி அவர்களின் நீடூர்ஆன்லைன் அறிமுக உரையுடன் சிறப்பு சொற்பொழிவாளர்களின் விழிப்புணர்வு உரைகளுடன் இரவு 10-15 மணி வரை சிறப்பாக நடைபெற்றது. இந்நிகழ்ச்சி நமது சமுதாய மக்களை விழிப்புணர்வோடு சிந்திக்கத் தூண்டியுள்ளதை பரவலாகக் காணப் படுகிறது. இந்நிகழ்ச்சியின் முழு விவரத்தையும், வீடியோக்களையும் விரைவில் காணலாம்.
லால்பேட்டை மன்பவுல் அன்வார் அரபிக் கல்லூரியின் முதல்வரும் உலகறிந்த உலமாப் பெருந்தகையுமான ஜக்கரியா ஹஜ்ரத் அவர்கள் 13-07-2007 அதிகாலை 1-மணி சுமாருக்கு காலமாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்
நமது சமுதாயம் மருத்துவம், கல்வி, நவீன தொழில்நுட்பத்தில் விழிப்புணர்வு பெற வேண்டும் என்கிற நோக்கத்தில் நமது இணையதளத்தின் சார்பில் நடத்தப்படும் “சமுதாய விழிப்புணர்வு பெருவிழா” இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 15-07-2007 ஞாயிறு அன்று காலை முதல் இரவு வரை நீடூர்-நெய்வாசல் J.M.H.நிகாஹ் மஹாலில் நடைபெறவிருக்கிறது. சமுதாய முன்னோடிகள் பலரும் பங்கேற்கிறார்கள். விழாவிற்கான ஏற்பாடுகள் மிகவும் விறுவிறுப்பாக நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. சுற்றுவட்டார முஸ்லிம் ஜமாஅத்களுக்கு அழைப்பிதழ்கள் அனுப்பப் பட்டு வருகின்றன.நீடூர்-நெய்வாசலை மையமாக வைத்து சமுதாயம் முழுமைக்கும் சேவையாற்றும் நீடுர்ஆன்லைன்.காம் நடத்தும் இவ்வித்தியாசமான நிகழ்ச்சியில் பங்கேற்க அனைவரும் ஆவலுடன் இருக்கின்றார்கள்.















