கடந்த 22-06-2007 வெள்ளிக்கிழமை நள்ளிரவு அபுதாபியில் காலமான எஸ்கொயர் லியாக்கத் அலி அவர்களின் உடல் 25-06-2007 திங்கள் மாலை அசர் தொழுகைக்குப் பின் அபுதாபி மத்திய மருத்துவமனைப் பள்ளிவாசலில் ஜனாஸாத் தொழுகை வைக்கப்பட்டு அங்கிருந்து சுமார் 40 கிலோமீட்டர் தொலைவில் உள்ள பனிய்யாஸ் மையவாடியில் நல்லடக்கம் செய்யப் பட்டது. அமீரகத்தின் பல பகுதிகளிலிருந்தும் ஊர்க்காரர்களும், உறவினர்களும் திரளாகக் கலந்துக் கொண்டு, மறைந்த லியாக்கத் அலி அவர்களின் மக்பிரத்திற்காகவும், மறுமை நல்வாழ்விற்காகவும் துஆ செய்தார்கள்.
நீடூர்-நெய்வாசல் ஹாஜித்தெரு மர்ஹூம் S.அப்துல் மஜீது அவர்களின் மகனும் எஸ்கொயர் S.A.சாதிக் அவர்களின் சகோதரருமான S.A.லியாக்கத் அலி அவர்கள் 22-06-2007 வெள்ளிக் கிழமை இந்திய நேரப்படி அதிகாலை 3:30-மணிக்கு அபுதாபியில் இறந்து விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
நீடூர்-நெய்வாசல் சபியாத்தெரு H.அப்துல் மஜீத் அவர்களின் மகன் பஜில் முஹம்மது (வயது 33) 15-06-2007 அன்று காலமாகி விட்டார்கள்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
ஜூன் 5, 2007 செவ்வாய் அன்று ஒமானில் சரித்திரம் காணாத சக்தி வாய்ந்த சூறாவளிக் காற்று வீசியது. அதன் வேகம் மணிக்கு 260 வரை இருந்தது. இதன் பாதிப்பு ஐக்கிய அரபு அமீரகத்தில் சிறிதும் அறியப்பட வில்லை. இதற்குள் துபையில் சூறாவளி என்ற வதந்திகள் பரவி இந்தியாவிலிருந்து அதிக பேர்களுக்கு தொலைபேசி விசாரணைகளும், குறுந்தகவல்களும் வரத் தொடங்கி விட்டன.








