26
Jul

மாஷா அல்லாஹ், பல ஆண்டுகளாக ஜாமிஆ மிஸ்பாஹில் ஹூதா மதரஸா பட்டமளிப்பு விழாவில் கலந்துகொள்ள வாய்ப்பில்லாத என்னைப் போன்றவர்களை, நேரலை ஒளிபரப்பின் மூலம் எங்களையும் விழாவில் சங்கமிக்கச் செய்தமைக்கு நீடூர்ஆன்லைன் நிர்வாகிகளை எவ்வளவு பாராட்டினாலும் தகும். எவ்வித தடங்களும் இல்லாமல், தரமான ஒளி அமைப்பையும், துல்லியமான ஒலி அமைப்பையும் அளித்து, முதல் நேரலை நிகழ்ச்சியிலேயே தமது தனித்துவத்தை நீடூர்ஆன்லைன் மீண்டும் நிரூபித்திருக்கிறது. உங்களின் சேவை மென்மேலும் சிறப்புடன் வளர எல்லாம் வல்ல அல்லாஹ் அருள் புரிவானாக! ஆமீன்.

-Mohamed Rafick, Malaysia.

24
Jul

நீடூர்-நெய்வாசல் கீழத்தெரு மர்ஹூம் பஹுருத்தீன் அவர்களின் துணைவியார் ஹாஜிரா அம்மாள் இன்று(24-07-2010) மாலை காலமானார்.

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.

தகவல்:M.S.ஜெஹபர் அலி, நீடூர்-நெய்வாசல்

4
Dec

முன்மாதிரி அரபிக்கல்லூரி வீரசோழன் ஹைராத்துல் இஸ்லாம்

KI1

(Read More…)

12
Nov

BH

நம் அன்றாட வாழ்க்கையில் நிகழும் பல்வேறு சம்பவங்களை சிறிது காலம் கழித்து அசைப்போட்டுப் பார்க்கிறபோது நாம் இவ்வாறு நடந்தது தேவையற்றது – தவறானது என்று உள்மனம் சொல்வதை உணர முடியும். தேவையற்ற உணர்ச்சி வேகத்தால் கொப்பளிக்கின்ற கோபம் சமுதாயப் பிளவிற்கு வித்திட்டு சமூக முன்னேற்றத்தை முடக்கி விடுகிறது. (Read More…)

16
Sep

ஈகோவை வென்ற இறைநபித் தோழர்கள்.-மவ்லவி கணீயூர் இஸ்மாயில் நாஜி

நபித் தோழர்கள்தான் உண்மையான முஸ்லிம் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு சிறந்த முன்மாதிரி.இன்று அல்லாஹ்விற்காக நாங்கள் அனைத்தையும் தியாகம் செய்வோம் என மேடை தோறும் முழங்கு வோர். அல்லாஹ்விற்காக தங்கள் ஈகோவை விட்டுத்தர தயாராக இல்லை.முஸ்லிம்களுக்கு அரசு உதவிஎதுவும் கிடைத்துவிட்டால் உடனே அனைத்து இஸ்லாமிய இயக்கங்களும் எங்களால்தான் கிடைத்தது என் மார் தட்டிக்கொள்கின்றனர்.காரணம் அவர்கள் இந்த உலகத்தில் கிடைக்கும் பயனுக்காக உழைக்கின்றனர்.ஆனால் நபித்தோழர்கள் அவ்வாறு அல்ல, அவர்கள் நோக்கம் மறுமைக்காக இருந்ததால் வெற்றியின் பெருமை யாருக்கு வேண்டுமானலும் போகட்டும், எனக்கு மறுமையில் கூலி கிடைத்தால் போதும் என எண்ணினர் இதோ வரலாற்றில் ஒரு நிகழ்வு. (Read More…)

4
Sep

இந்து-முஸ்லிம் உறவு கடந்த காலங்களில்….
 கி-பி எட்டாம்நூற்றாண்டு முதல் கிபி 18ம் நூற்றாண்டு வரை இந்தியாவை ஆண்ட முஸ்லிம்களின் ஆட்சியை தலை சிறந்த ஆட்சியென போற்ற இயலாவிட்டலும் அந்த 10 நூற்றாண்டுகளில் இந்து முஸ்லிம் கலவரங்கள் நடந்ததாக இந்திய சரித்திரத்தின் எந்த பகுதிலும் காண இயலாது.ஆனால் ஏகாதிபத்திய வெள்ளையர்கள் தங்கள் ஆட்சியை இங்கே நிலை நிறுத்த முயன்ற 19-ம் நூற்றாண்டில் தான் நாம் முதன் முறையாக இந்து-முஸ்லிம் கலவரங்களைப் பற்றி அறிகிறோம். (Read More…)

25
Jun

“புர்கா” பற்றிய பிரான்ஸ் அதிபர் சர்கோசியின் கருத்து தவறாக விளங்கப்பட்டதா?  -அபூ அய்மன், பிரான்ஸ்

நாகரீகத்தின் உச்சத்தில் இருக்கும் பிரான்ஸ் போன்ற ஐரோப்பிய நாடுகளில் இஸ்லாம் வேகமாகப் பரவிவரும் இவ்வேளையில் புதிதாக தீனுல் இஸ்லாத்தை வாழ்க்கை நெறியாக மனமுவந்து ஏற்கும் பிரஞ்சு முஸ்லிம்கள் பேணுதலின் அடிப்படையில் தங்கள் முகங்களை முழுவதுமாக மறைத்துக் கொண்டு புதிய பாணியில் வாழ்க்கையை தொடர்கிறார்கள். (Read More…)

24
Apr

கோடைக்கால சிறப்பு நிகழ்ச்சியில் அண்ணன் மன்சூர் அவர்களின் கருத்துகள்  நமது மாணவர்களுக்கும், மாணவிகளுக்கும் மிகவும் பயனுல்லதாக இருக்கும், அண்ணன் மன்சூர் அவர்கள் இன்னும் பல பயனுள்ள கருத்துகளை முன் வந்து நமது ஊர் மக்களுக்கு சொல்லவேண்டும், அல்லாஹ் அவர்களுக்கு பரக்கத்தையும், ரஹ்மத்தையும் கொடுப்பானாக!
இந்த கோடை சிறப்பு நிகழ்ச்சியை பார்க்கும்போது 1990-ல் அண்ணன் எடுத்த “பாலசாரணி” வகுப்புகள் என் நினைவுக்குள் வருகிறது,அல்ஹம்துலில்லாஹ.
இந்த அருமையான, பயனுள்ள நிகழ்வை தேவையான நேரத்தில் வழங்கி கொண்டிருக்கும் நீடூர் ஆன்லைன் . காம் -ற்கு என் குடும்பத்தின் சார்பாகவும், எங்கள் ஊர் சார்பாகவும் கோடான கோடி நன்றி சொல்ல முயல்கிறேன். வாழ்த்துக்கள்.keep it up!!!!
அன்புடன்,
ஷா. ஷகதூர் (எஸ்கொயர் )
ஆஸ்திரேலியா
.

18
Apr

உலகெங்கும் வாழும் ஊர் சொந்தங்கள் தங்களின் மின்னஞ்சல், தொலைபேசி, புகைப்படம் & வசிப்பிடம்(நாடு) விவரங்களை அனுப்பி வைக்க வேண்டுகிறோம். ஊர் மக்களின் வேண்டுகோளுக்கிணங்க நமது இணையதளத்தில் வெளியிடுவோம். இதன் மூலம் பல்லாண்டுகளாக வெளிநாட்டில் வசிப்பதால் தொடர்பில் இல்லாத நண்பர்களையும், உறவினர்களையும் தொடர்பு கொண்டு மகிழ பாலம் அமைப்போம்.

16
Apr

nnp

உயர் சமூகமாகவும் நடுநிலை சமூகமாகவும் திருமறை குர்ஆனில் அல்லாஹ்வால் சிறப்புடன் குறிப்பிடப்பட்டிருக்கின்ற இஸ்லாமிய சமுதாயம் உண்மையில் தற்போது எத்தகைய நிலையில் இருக்கின்றது என்பதை சுயபரிசோதனை செய்து கொள்ள  வேண்டிய கட்டாயத்தில் சமுதாய மக்கள் ஒவ்வொருவரும் இருக்கின்றோம்.

(Read More…)

2
Apr

summer2

நீங்கள் எதிர் வருகின்ற கோடை விடுமுறையை எப்படிக் கழிக்கலாம் என வெகு ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருப்பது தெரிகிறது. கடின உழைப்புக்குப் பின்பு கட்டாயம் ஓய்வு தேவை. ஆனால் அதே நேரத்தில், ஒரு பொன்னான வாய்ப்பாக வருகின்ற ஒரு விடுமுறைக் கால அவகாசத்தை பெரும்பாலான மாணவர்கள் வீணடித்து விடுகின்ற நிலையையும் நாம் கண்டு வருகிறோம்.

எனவே உங்களுக்கென்று சில ஆலோசனைகள்: (Read More…)

1
Apr

summer1


கோடை நம்மை நெருங்கிக் கொண்டிருக்கிறது. படு சீரியஸாக தேர்வுகளை எழுதி முடித்து விட்டு மாணவர்களும் மாணவிகளும் – எதிர் வரும் கோடை விடுமுறையை “ஜாலியாக” எப்படிக் கழிக்கலாம் என வெகு ஆவலுடன் எதிர்நோக்கிக் காத்திருக்கிறார்கள் அவர்கள்.

பெற்றோர்களைப் பொறுத்தவரை இது ஒரு பெரிய சவால்.சில பெற்றோர் – “ஏன் தான் இந்தக் கோடை வருகிற்தோ” என்று அலுத்துக் கொள்ளும் அளவுக்கு அங்கலாய்த்துக் கொள்கிறார்கள்.

எனவே பெற்றோர்களாகிய உங்களுக்கு சில ஆலோசனைகள்:

அவர்களுடன் கொஞ்ச நேரம் (Read More…)

19
Mar

சாந்தியும் சமாதானமும் உங்கள் மீது உண்டாவதாக..

உலகை உலுக்கி வரும் பொருளாதாரப் பிரச்சினையை நாம் எதிர்கொள்ளவும், முன்னெச்சரிக்கையாக இருக்கவும் இஸ்லாமிய வாழ்வு நெறி எப்படி செம்மைப் படுத்துகிறது என்பதை இதன் மூலம் அறிய முடிந்தது. திருமறையிலிருந்து பொருத்தமான மேற்கோள்கள் இந்த கட்டுரையை மேலும் அழகு சேர்த்தது. இந்தக் கட்டுரை பாதிக்கப்பட்டவர்களுக்கு மன உறுதியையும்,மற்றவர்களுக்கு அதனை எதிர்கொள்ளும் பக்குவத்தையும் தரும் என்று நம்புகிறேன். வாழ்த்துக்கள்.

H.பிரோஸ்கான், வவ்வாலடி

17
Mar

gc

இன்று ஒட்டு மொத்த உலகமுமே பொருளாதாரப் பின்னடைவால் சிக்கித் தவிக்கின்றது. உலகின் பல்வேறு நாடுகளிலும் உள்ள பல்வேறு நிறுவனங்களில் ஆட்குறைப்பு , சம்பளக் குறைப்பு என்று தடாலடியான நடவடிக்கைகள் மேற்கொள்ளப் படுகின்றன.

இதனால் – வேலையை இழந்தவர்களும், சம்பளம் குறைக்கப் பட்டவர்களும் பல்வேறு பொருளாதாரப் பிரச்னைகளுக்கும், மன நலப்பிரச்னைகளுக்கும் ஆளாகிறார்கள். (Read More…)

10
Mar

ttalaq

இஸ்லாமிய மாத இதழ்களில் இப்படி சில கேள்விகள் கேட்கப் படுகின்றன:

“எஸ்.எம்.எஸ் வழியே அல்லது தொலைபேசி வழியே தலாக் சொன்னால் தலாக் நிகழ்ந்து விடுமா?” ஆம்! நிகழ்ந்து விடும் என்று ஒரே வரியில் பதில் அளிக்கப் படுகிறது.

ஆனால் பின்னணி என்ன என்பது புரிந்து கொள்ளப் படாமலே பதில்கள் அளிக்கப் படுவதால், பலரது வாழ்க்கை பாதிக்கப் படுகிறது என்பதை ஏனோ புரிந்து கொள்ளத் தவறி விடுகிறோம். சாதாரணமாக மருத்துவம் குறித்த கேள்விகளுக்கு பதில் அளிக்கும் மருத்துவர்கள் கூட, தங்கள் ஆலோசனைகளை எழுதி விட்டு, இறுதியில் அருகில் உள்ள மருத்துவரை அணுகவும் என்று முடிக்கிறார்கள். ஏன் அப்படிப் பட்ட ஒரு அணுகுமுறையை நாம் மேற்கொள்ளக் கூடாது? தலாக் சம்பந்தப் பட்ட கேள்விகளுக்கு அளிக்கின்ற பதில்களோடு சேர்த்து, அருகிலுள்ள இமாமையோ, அரபுக் கல்லூரியையோ அணுகவும் என்று எழுதலாம் தானே? விஷயத்துக்கு வருவோம். (Read More…)

7
Mar

“நீடூர்-நெய்வாசல்” முன்மாதிரி ஜமாஅத் – ஆவல் நிறைவேறுமா??-மானசீகன்

அல்லாஹ் நமக்களித்த மிகப்பெரிய சக்தி ஜமாஅத் கூட்டமைப்பு. ஜமாஅத் கூட்டமைப்பின் கட்டுக்கோப்பைப் பார்த்து அரசு துறைகள் கூட வியந்த வரலாறு உண்டு. ஆனால் பல ஊர்களிலும் ஜமாஅத் கட்டுக்கோப்பு கேள்விக்குறியாகி வருகின்றது என்ற கசப்பான உண்மையை நாம் ஒப்புக்கொண்டுதான் ஆக வேண்டும். (Read More…)

23
Jan

pc

கிறிஸ்துவப் பள்ளிக் கூடங்களில் படிக்கும் வாய்ப்பு எனக்கு இளமையில் கிட்டியது முத‌லில் ரோமன் கத்தோலிக்க கன்யாஸ்திரீகள் நடத்திய கான்வென்ட் அடுத்து பிராடஸ்டண்ட் மிஷன் நடத்திய உயர்நிலைப்பள்ளி எல்லா வகுப்புகளிலும் இந்து சமயத்தைச் சார்ந்த‌ மாணவர்களே(கான்வென்டில் மாணவிகளும்) மிக அதிகமாக இருந்தார்கள். (Read More…)

16
Jan

சகோதரர் முஹம்மது ரபீக் அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்,

ஆரோக்கியமான கலந்துரையாடல்கள் மூலமாக இன்ஷா அல்லாஹ் நல்ல திருப்புமுனையை நிச்சயம் ஏற்படுத்த முடியும் என்ற நம்பிக்கையுடன் அனைவரும் முன்வந்து தமது கருத்துக்களை பகிர்ந்து கொண்டால் இன்ஷா அல்லாஹ் கூடிய விரைவில் அழகிய முன் மாதிரியான ஓர் ஜமாத் அமையும் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. (Read More…)

15
Jan
சகோதரர் A.M.ஷாஹூல் ஹமீது அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்,
பல வருடங்களுக்கு முன்பு, வரதட்சணை வாங்கக் கூடாதென்று ஊர் நிர்வாகிகளால் இயற்றப்பட்ட (எழுத்துக்களால் எழுதப்படாத-மீறினாலும் தண்டனை எதுவும் அளிக்கப்படாத) ஒரு சட்டத்தை ஏற்று, அனைவரும் ஒன்றுபட்டு வரதட்சணை என்ற வார்த்தையையே வழக்கொழியச்செய்து, அரசாங்கத்திற்கே முன்மாதிரியாக விளங்கிய நமது சமுதாயம், இன்று தராவீஹ் தொழுகை எத்தனை ரகாஅத் என்பதில் ஆரம்பித்து, ஹனஃபி இமாமைப் பின்பற்றி ஷாஃபி முறையில் தொழுதுகொள்வதுவரை கொள்கை முரண்பாடுகளால் பிளவுப்பட்டுள்ளதே? ஏன்? (Read More…)
14
Jan

msh

நீடூர்ஆன்லைன்.காம் இணையதளம் வாயிலாக மக்கள் மனதில் அழகிய தாக்கத்தை ஏற்படுத்துவதே இக்கட்டுரையின் நோக்கம்.

பல நூற்றாண்டுகளாக அறிவை வளர்த்தோம். சில நூற்றாண்டுகளாக விஞ்ஞானம் வளர்த்தோம். இனியாவது சகோதரத்துவம் வளர்ப்போம். (ஹாங்காங்கிலிருந்து A.M.ஷாஹுல் ஹமீது)

எந்த ஒரு சமுதாயத்திலும் அல்லது நிர்வாகத்திலும் மாற்றுக் கருத்து / கருத்து வேறுபாடு நிச்சயம் இருக்கும்.

அவ்வாறான கருத்து வேறுபாடுகள்தான் உலகில் பல ஆரோக்கியமான மாற்றங்களை ஏற்படுத்தியுள்ளன. ஆகையால் மாற்றுக் கருத்துக்களை நாம் நிச்சயமாக வரவேற்கத்தான் வேண்டும். (Read More…)