பிரான்ஸ் வில்லியர்ஸ் சுர்மானில் கடந்த 07-03-2010 ஞாயிறன்று நடைபெற்ற சீரத்துன் நபி விழாவில் மெளலவி முஸ்தபா ஜமாலி அவர்களின் சிறப்புரை
பிரான்ஸ் வில்லியர்ஸ் சுர்மானில் கடந்த 07-03-2010 ஞாயிறன்று நடைபெற்ற திருக்குர்ஆன் போட்டியில் பங்கேற்ற சிறுவர், சிறுமியருக்கு பரிசளிப்பு நடைபெற்றது.
நீடூர்-நெய்வாசல் J.M.H. அரபிக் கல்லூரியில் நடைபெற்ற சீரத் தொடர் சொற்பொழிவில் மெளலவி சதீதுத்தீன் பாகவி அவர்களின் சிறப்புரை
இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 16-03-2010 செவ்வாய் கிழமை காலை 9-மணியளவில் நீடூர்-நெய்வாசல் J.M.H.நிகாஹ் மஹாலில் மிஸ்பாஹிகள் பேரவைக் கூட்டம் நடைபெற உள்ளது. உலகெங்கும் வாழும் மிஸ்பாஹிகள் இயன்றவரை தவறாமல் பங்கேற்க வேண்டுகிறார்கள். பங்கேற்க இயலாதவர்களும் தங்களது முகவரிகளை பதிவு செய்ய வேண்டுகிறார்கள்.
தொடர்பு கொள்ள வேண்டிய முகவர்:
அல்ஹாபிஸ்.T.M.அப்துல் குத்தூஸ் மிஸ்பாஹி, மீடியா தொடர்பாளர் – மிஸ்பாஹிகள் பேரவை
கைபேசி:0091 9443742840
நீடூர்-நெய்வாசல் ஹாஜித்தெரு முஹம்மது ரபீக் அவர்களின் தந்தை முஹம்மது நூர்தீன் இன்று(02-03-2010) காலை மலேசியாவில் காலமானார்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்று மாலை மலேசியாவில் நல்லடக்கம் செய்யப்பட்டது.
பிரான்ஸ் வில்லியர்-சுர்மான் அல் இஹ்ஸான் பள்ளியில் சீரத்துன் நபி விழா இன்ஷா அல்லாஹ் எதிர்வரும் 07-03-2010 ஞாயிறு காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை நடைபெற உள்ளது. அவ்வமயம் குழந்தைகளின் குர்ஆன் ஓதும் போட்டியும் மார்க்க சொற்பொழியும் நடைபெறும்.
நீடூர்-நெய்வாசல் ஜாமிஆ மிஸ்பாஹுல் ஹுதா அரபிக் கல்லூரியில் இவ்வாண்டு ரபீய்யுல் அவ்வல் பிறை 1-லிருந்து 12 வரை நபிகளாரின் வரலாறு கூறும் சீரத் – தொடர் சொற்பொழிவு நிகழ்ச்சி சிறப்பாக நடைபெற உள்ளது. நிகழ்ச்சிக்கு அணி சேர்க்கும் வண்ணம் நாடறிந்த உலமா பெருமக்கள் சிறப்புரையாற்ற உள்ளார்கள்.
இத்தொடர் நிகழ்ச்சியை நீடூர் மற்றும் நீடூர்-நெய்வாசல் ஜமாஅத்தினர் இணைந்து ஏற்பாடு செய்துள்ளார்கள் என்பது குறிப்பிடத் தக்கது.
தகவல்: J.P.ஜவ்ஹர் அலி, நீடூர்-நெய்வாசல்
வட்டியின் கொடுமையைப் பற்றி ஜும்ஆ உரையாற்றிய போடி நாயக்கனூர் இமாமை கடுமையாகத் தாக்கிய கொடுங்கோல் முத்தவல்லியை நீக்ககோரி வக்பு வாரியத் தலைவருக்கும், தமிழக முதல்வருக்கும் புகார் அனுப்ப வேண்டுகிறோம்.
விவரம் வீடியோவில்
நீடூர்-நெய்வாசல் STD நஜீர் அஹமது சகோதரர்களின் பெரிய தாயார் மகன் சங்கரன்பந்தல் ஷேக் பாவா என்னும் ஷேக் தாவூத் இன்று(27-01-2010) காலை காலமானார்.
இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்.
அன்னாரின் ஜனாஸா இன்று(27-01-2010) இரவு 7-மணிக்கு சங்கரன்பந்தலில் நல்லடக்கம் செய்யப்பட்டது.маси











